
இயக்குநர் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த திரையுலகம்
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாரதிராஜாவின் உடல், அவரது சொந்த ஊரான தேனியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ் திரையுலகமே நேரில் திரண்டு வந்து தங்கள் பேராசானுக்கு இறுதி மரியாதை செலுத்தியது.
காலமான இயக்குநர் பாலகுமாரனின் உடல், தேனி மாவட்டம், கொடைக்கானல் சாலையில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தனது படைப்புகளின் மூலம் மண் மணத்தையும், மக்களின் வாழ்வியலையும் திரையில் உயிர்ப்பித்த அந்த மகத்தான கலைஞனுக்கு இறுதி மரியாதை செலுத்த மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து ரசிகர்கள் பெருந்திரளாகக் கூடினர்.
நடிகைகள் சுகாசினி, ராதிகா, நிரோஷா, கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர்கள் பார்த்திபன், சமுத்திரக்கனி, வடிவேலு, இளவரசு, இயக்குநர்கள் வெற்றிமாறன், சீமான், ராம், ஆர்.கே.செல்வமணி, பேரரசு உள்ளிட்ட திரையுலகின் முக்கிய ஆளுமைகள் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். நீண்ட வரிசைகளில் காத்திருந்து, மக்கள் தங்கள்இயக்குநருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு மரியாதை செய்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் அரசு மற்றும் கட்சி சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மாலை 4 மணியளவில், இயக்குநரின் மகள் ஜனனி மற்றும் உறவினர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். காவல்துறையினரின் மரியாதை அணிவகுப்புடன், அலங்கரிக்கப்பட்ட பாடையில் அவரது உடல் பண்ணை வீட்டிலிருந்து நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மூன்று சுற்றுகளாக 72 குண்டுகள் வானை நோக்கி முழங்க, அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் வரலாற்றுப் பக்கங்களில் அழியா இடம்பிடித்த அந்த மண்ணின் மைந்தனின் உடல், அவர் நேசித்த தேனி மண்ணிலேயே விதைக்கப்பட்டது. கூடியிருந்த ரசிகர்கள் பலர், 'என் இனிய தமிழ் மக்களே' எனும் அவரது புகழ்பெற்ற வசனத்தை உணர்ச்சிப்பூர்வமாக முழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். டி.ஐ.ஜி சசிமோகன் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
